பதிவு செய்த நாள்
10 மே2016
06:53
புதுடில்லி:மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, லோக்சபாவில் கூறியதாவது:தொழிலாளர் சேமநல நிதியில், செயல்படாத கணக்குகளில், 43 ஆயிரம் கோடி ரூபாய் கோரப்படாமல் உள்ளது. இத்தொகைக்கு வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், தொழிலாளர் சேமநல நிதியம், 1.19 கோடி கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளது; 1.18 லட்சம் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
தொழிலாளர் சேமநல நிதி உறுப்பினர்களுக்கு, ‘யு.ஏ.என்.,’ என்ற ஒருங்கிணைந்த பொதுவான எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணுடன் ஆதார் அல்லது பான் எனப்படும் வருமான வரி கணக்கு எண்ணை இணைக்கும் தொழிலாளர்கள், தங்கள் நிறுவனத்தின் ஒப்புதலின்றி நேரடியாக நிதி கோரிக்கைகளை அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|