பதிவு செய்த நாள்
11 மே2016
04:53
புதுடில்லி:‘கடந்த ஏப்ரலில், ‘ஆன்லைன்’ வாயிலான பணியாளர் தேர்வு, 28 சதவீதம் குறைந்துள்ளது; இது, முந்தைய மார்ச்சில், 42 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது’ என, மான்ஸ்டர் டாட் காம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், சென்னை, மும்பை உள்ளிட்ட, 13 நகரங்களில், வலைதளம் வாயிலான வேலைவாய்ப்பு குறித்து, கடந்த ஏப்ரலில் ஆய்வு மேற்கொண்டது.அதில், அதிக அளவில் பணியாளர்களை தேர்வு செய்ததில், தகவல் தொழில்நுட்பத் துறை, 63 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. அடுத்த இடத்தில், அச்சகம் மற்றும் ‘பேக்கேஜிங்’ துறை உள்ளது. இத்துறை, 2015 முதல், ஆன்லைன் வாயிலான வேலைவாய்ப்புகளை அளிப்பதில், 60 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையிலும், வலைதளம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவது அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும், இத்துறையின் வேலைவாய்ப்பு வளர்ச்சி, 47 சதவீதமாக குறைந்துள்ளது; இது, முந்தைய மார்ச்சில், 71 சதவீதமாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களாகவே, தயாரிப்பு துறையில், வலைதளம் வாயிலான வேலைவாய்ப்புகள் குறைந்து உள்ளன.மத்திய அரசு, ‘இந்தியாவில் தயாரிப்போம், எழுந்திடு இந்தியா, சுலபமான வர்த்தகம், திறன் வளர்ப்பு பயிற்சி’ உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால், தயாரிப்பு துறையில், வலைதளம் வாயிலான வேலைவாய்ப்புகள், வரும் மாதங்களில் பெருகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|