பதிவு செய்த நாள்
12 மே2016
00:49
புதுடில்லி:மொபைல் போனில், ‘கால் டிராப்’ எனப்படும், துண்டிக்கப்படும் அழைப்பிற்கு, வாடிக்கையாளர்களுக்கு, ஒரு ரூபாய் தர வேண்டும் என, மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டு, ‘டிராய்’ உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தாண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரவிருந்த இந்த திட்டத்தை எதிர்த்து, இந்திய மொபைல் போன் சேவையாளர்கள் சங்கமான – ‘கோய்’ தொடர்ந்த வழக்கை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கோய், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. நேற்று, இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘டிராய், தன் அதிகார வரம்பை மீறி, தன்னிச்சையாக, நியாயமற்ற வகையில், உத்தரவு பிறப்பித்துள்ளது; வெளிப்படை தன்மையற்ற இந்த உத்தரவு, நிறுத்தி வைக்கப்படுகிறது’ என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|