பதிவு செய்த நாள்
12 மே2016
00:53
புதுடில்லி:‘‘குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம், அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன,’’ என, மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:
இந்தியாவில், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், மின் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பில், ஏராளமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம், பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலமும் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில், அதிகம் உள்ள தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அங்கு, அதே வகை தொழில்களை உள்ளடக்கிய, ‘கிளஸ்டர்’ என்ற தொழில் குழுமம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, நாடு முழுவதும் உள்ள, 29 மாநிலங்களில், 1,018 தொழில் குழுமங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|