பதிவு செய்த நாள்
13 மே2016
07:13
புதுடில்லி:போர்டு மோட்டார் நிறுவனம், சென்னையை அடுத்த மறைமலை நகரில், 2,500 கோடி ரூபாய் செலவில், உலக தொழில்நுட்ப மற்றும் வணிக மையம் ஒன்றை அமைக்க இருப்பதாக தெரிகிறது. போர்டு மோட்டார் நிறுவனத்திற்கு, சென்னைக்கு அருகில் உள்ள மறைமலை நகரில், 300 ஏக்கரில், கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, ஆண்டுக்கு இரண்டு லட்சம் கார்களும், 3.40 லட்சம் இன்ஜின்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார் மற்றும் இன்ஜின்களை, 50 நாடுகளுக்கு, போர்டு நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில், நிஸான், மகிந்திரா நிறுவனங்கள் அமைத்திருப்பதை போல, சென்னை, மறைமலை நகரில், உலக தொழில்நுட்ப மற்றும் வணிக மையம் ஒன்றை, போர்டு நிறுவனமும் அமைக்கவிருக்கிறது. இந்த மையத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு; பொருட்கள் ஆய்வுக் கூடம் ஆகியவை இடம் பெறும் என, தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|