பதிவு செய்த நாள்
18 மே2016
07:36
புதுடில்லி : ‘ஹலால்’ உணவு துறை, 2019ல், 2.50 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என, தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது.
உலகின் பல நாடுகளில், ‘ஹலால்’ உணவு வகைகளுக்கு, தேவை அதிகரித்து வருகிறது. இதனால், இந்த வகை உணவு துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, ‘கடந்த, 2014ல், ‘ஹலால்’ உணவு துறையின் மதிப்பு, 79,500 கோடி டாலராக இருந்தது. இது, ஆண்டுதோறும், 10 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, 2019ல், ஹலால் உணவு துறையின் மதிப்பு, 2.50 லட்சம் கோடி டாலராக உயரும்’ என, தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
இதுகுறித்து, தனியார் ஆய்வு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உலகின் பல நாடுகளில், சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள், ‘ஹலால்’ உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவதால், அதற்கான தேவை அதிகரித்து வருகிறது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|