பதிவு செய்த நாள்
18 மே2016
07:37
புதுடில்லி : இந்தியாவின் தேயிலை உற்பத்தி, 121.30 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது. உலகில், தேயிலை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்திலும், தேயிலை பயன்பாட்டில் முதலிடத்திலும் உள்ளது. கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 121.30 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய, 2014 – 15ம் ஆண்டில், 119.70 கோடி கிலோவாக குறைந்து இருந்தது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில், தேயிலை உற்பத்தி அதிகரித்ததே, நாட்டின் தேயிலை உற்பத்தி அதிகரிப்பிற்கு காரணம். இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில், மேற்கண்ட இரண்டு மாநிலங்களின் பங்கு மட்டும், 80 சதவீதம் அதாவது, 96.30 கோடி கிலோ என்ற அளவில் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு, தேயிலை ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 10 சதவீதம் அதிகரித்து, 3,824 கோடி ரூபாயில் இருந்து, 4,200 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|