பதிவு செய்த நாள்
03 ஜூன்2016
07:35
புதுடில்லி: ‘‘இந்தியாவில், 2020ம் ஆண்டில், மின்னணு துறை முதலீடு, 5,600 கோடி டாலராக அதிகரிக்கும்,’’ என, மத்திய மின்னணு துறை இயக்குனர் எஸ்.கே.மார்வா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மின்னணு பொருட்களின் உற்பத்திக்கு, மத்திய அரசு, பல சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, 25 சதவீத மானியத்துடன், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்து உள்ளது. தற்போது, இந்தியாவில், மின்னணு பொருட்களின் உற்பத்தி மதிப்பு, 10 ஆயிரம் கோடி டாலர் என்றளவில் உள்ளது. இது, வரும், 2020ம் ஆண்டில், 40 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும். அப்போது, மின்னணு பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு, 8,000 கோடி டாலராக இருக்கும். இந்தியாவில், இதுவரை, மின்னணு துறையில், 1,600 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 2020ல், 5,600 கோடி டாலர் அளவிற்கு முதலீட்டை ஈர்க்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|