பதிவு செய்த நாள்
03 ஜூன்2016
15:23
புதுடில்லி : டீசல் விலை உயர்வால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், நேற்று முன்தினம், டீசல் விலையில், லிட்டருக்கு, 2.26 ரூபாய்; பெட்ரோல் விலையில், லிட்டருக்கு, 2.58 ரூபாய் உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வால், சரக்கு வாகன வாடகையை, 10 சதவீதம் உயர்த்த உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.தமிழகத்திற்கு தேவையான காய்கறிகள், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும்; பருப்பு வகைகள், எண்ணெய், பூண்டு, புளி ஆகியவை வடமாநிலங்களில் இருந்தும்; பழங்கள், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வருகின்றன. விளைச்சல் குறைவால், காய்கறிகளின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பழங்களும் கூடுதல் விலையில் விற்பனையாகின்றன. இந்நிலையில், வாகன வாடகை அதிகரித்தால், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும், 10 - 20 சதவீதம் வரை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|