பதிவு செய்த நாள்
05 ஜூன்2016
01:31
கோல்கட்டா:ஜியோனி நிறுவனம், மொபைல் போன் தொழிற்சாலை அமைக்க, வட மாநிலங்களில் இடத்தை தேர்வு செய்து வருகிறது. சீனாவை சேர்ந்த ஜியோனி நிறுவனம், இந்தியாவில், மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, வட மாநிலங்களில், இடத்தை தேர்வு செய்யும் பணியில், அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
இதுகுறித்து, ஜியோனி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், உலகம் முழுவதும், ஆண்டுக்கு, 2.30 கோடி மொபைல் போன்களை விற்பனை செய்கிறது. இந்தியாவில், ஆண்டுக்கு, ஒரு கோடி மொபைல் போன்கள் தயாரிக்கும் திறன் உடைய, தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்காக, 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். நடப்பு நிதியாண்டில், எங்கள் நிறுவனத்தின் விற்பனை, மூன்று மடங்கு அதிகரித்து, 9,000 கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|