பதிவு செய்த நாள்
05 ஜூன்2016
01:35
புதுடில்லி:ஜெ.பி., குழுமம், வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடன் மற்றும் வட்டி இவற்றுக்கான தொகை, 4,460 கோடியை திரும்ப செலுத்தாமல் உள்ளது. ஜெ.பி., குழுமம், சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தது. இந்த குழுமம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதை அடுத்து, தனக்கு சொந்தமான குறிப்பிட்ட சில சிமென்ட் ஆலைகளை, 15 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் மதிப்பிற்கு, குமாராமங்களம் பிர்லாவின், ‘அல்ட்ரா டெக்’ நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. சிமென்ட் துறையில், இதுவே மிகப்பெரிய கையகப்படுத்தல் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெ.பி., குழுமம், பல்வேறு வங்கிகளிடம் இருந்து, 2,905.60 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வங்கி உள்ளது. இந்த கடனுக்கான வட்டி தொகையான, 1,558.93 கோடி ரூபாயையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளது. அசல், வட்டி சேர்த்து, 4,460 கோடி ரூபாயை செலுத்தாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|