பதிவு செய்த நாள்
05 ஜூன்2016
01:40
திருப்பூர்:ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிடம் இருந்து, ஆடை ஏற்றுமதி வாய்ப்பு பெறுவதற்கான சர்வதேச கண்காட்சி, நவ., 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மெல்போர்ன் நகரில் நடக்கிறது.ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கான, ஆடை தேவைகளை பூர்த்தி செய்ய, இந்த ஒரே கண்காட்சி மட்டுமே நடப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த இரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பங்கேற்பது வழக்கம்.வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), பல்வேறு நாடுகளில் நடக்கும் கண்காட்சிகளில், ஆடை உற்பத்தியாளர்களை பங்கேற்க செய்து, ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்று தருகிறது.நடப்பாண்டுக்கான கண்காட்சி, நவ., 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள, மெல்போர்ன் கண்காட்சி அரங்கில் நடக்கிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ), ஏ.இ.பி.சி., தரப்பில், இந்திய ஜவுளித் துறையினர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.ஏ.இ.பி.சி., முதன்மை இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆடை வர்த்தக மதிப்பை உயர்த்த, திருப்பூர் தொழில் துறையினர் முயற்சித்து வருகின்றனர்; ஆஸ்திரேலிய நாட்டுக்கான ஆடை ஏற்றுமதிக்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. திருப்பூர் தொழில் துறையினர், கண்காட்சியில் பங்கேற்று, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டு ஆடை ஏற்றுமதிக்கான, ‘ஆர்டர்’ பெறலாம்’ என, கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|