பதிவு செய்த நாள்
06 ஜூன்2016
06:49
புதுடில்லி : எச்.டி.எப்.சி., எர்கோ நிறுவனம், எல் அண்டு டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த எச்.டி.எப்.சி., எர்கோ நிறுவனம், பொது காப்பீட்டு துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, 108 அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், எச்.டி.எப்.சி., எர்கோ, பொது காப்பீட்டு துறையில் ஈடுபட்டு வரும், எல் அண்டு டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது. இதன் மதிப்பு, 551 கோடி ரூபாய். இதுகுறித்து, எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரேக் கூறியதாவது: இத்துறையில் நிலவும் போட்டியை கருத்தில் கொண்டு, எல் அண்டி நிறுவனத்தை இணைக்க உள்ளோம். இது, எங்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும். இந்த இணைப்பால், எங்கள் நிறுவனம் பெரியளவில் உருவெடுப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கும் அதிக பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|