பதிவு செய்த நாள்
10 ஜூன்2016
07:16
மும்பை : லோதா குழுமம், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது. லோதா குழுமம், ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் துறை மந்தமாக உள்ள நிலையிலும், இக்குழுமத்தின் விற்பனை, கடந்த நிதி ஆண்டில், 6,430 கோடி ரூபாயாக உள்ளது. அதேசமயம், முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப்., விற்பனை, 3,150 கோடி ரூபாய் என்றளவில் தான் உள்ளது. லோதா குழுமம், கடந்த ஆண்டில், நாடு முழுவதும், 6,800 குடியிருப்புகளை விற்பனை செய்து உள்ளது. இதை, நடப்பாண்டில், 7,000 ஆக அதிகரிக்க, முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், விரிவாக்க திட்டங்களில் ஈடுபடுவதற்காக, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, லோதா குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பங்கு வெளியிடுவது குறித்த பணி, 12 – 15 மாதங்களில் துவங்கும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|