பதிவு செய்த நாள்
14 ஜூன்2016
07:36
புதுடில்லி : டாடாவின் குரோமா, விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த குரோமா நிறுவனம், வீட்டு உபயோக மின் சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, சென்னை உட்பட, முக்கிய நகரங்களில், 96 ஸ்டோர்கள் உள்ளன. தற்போது, குரோமா, தன் விற்பனையை அதிகரிக்கும் வகையில், சிறிய ஸ்டோர்களை அதிகளவில் துவக்க திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து குரோமா அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோல்கட்டா, குஜராத், மஹாராஷ்டிராவில் உள்ள இரண்டாம், மூன்றாம் நகரங்களில், புதிதாக ஸ்டோர்களை துவக்க திட்டமிட்டு உள்ளோம். இவை, 2,500 சதுர அடி கொண்டவையாக இருக்கும். எங்கள் ஸ்டோர்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். குறைந்த சதுர அடியில், ஸ்டோர்களை துவக்குவதன் மூலம், வாடகை செலவும் மிச்சமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|