பதிவு செய்த நாள்
15 ஜூன்2016
07:30
புதுடில்லி : அமர ராஜா நிறுவனம், பேட்டரி உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. அமர ராஜா பேட்டரிஸ் நிறுவனம், வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, ஆந்திர மாநிலத்தில், இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. அசோக் லேலண்டு, போர்டு, ஹோண்டா, ஹூண்டாய், மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு, பேட்டரி சப்ளை செய்கிறது. தற்போது, இந்நிறுவனம், பேட்டரி உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. அதன்படி, ஆண்டுக்கு, 1.10 கோடி பேட்டரி தயாரிக்கும் திறனை, 2.50 கோடியாக அதிகரிக்க உள்ளது. இதில், கார்களுக்கான பேட்டரி, 82.50 லட்சத்தில் இருந்து, 1.10 கோடி; இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி திறனை, 1.10 கோடியில் இருந்து, 1.50 கோடியாக அதிகரிக்க உள்ளது. கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 4,691 கோடி ரூபாய்; லாபம், 489 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|