பதிவு செய்த நாள்
15 ஜூன்2016
07:29
புதுடில்லி : இமாமி குழும நிறுவனம், தன் விற்றுமுதலை, 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இமாமி குழுமம், இமாமி எப்.எம்.சி.ஜி., இமாமி அக்ரோடெக் உள்ளிட்ட, பல நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த குழுமத்தின் விற்றுமுதல், 12 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. தற்போது இக்குழுமம், தன் நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை, அதிகளவில் விற்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில், விற்றுமுதலை, 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இமாமி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எப்.எம்.சி.ஜி., சமையல் எண்ணெய், ஆரோக்கிய பராமரிப்பு, சிமென்ட் ஆகிய துறைகளில், அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. இதனால், அந்த துறைகளில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், இமாமி குழுமம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|