வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரகுராம் ராஜன் முடிவால் ஏமாற்றம் : பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூன்2016
09:53
மும்பை : ஐடி துறை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் அடைந்திருந்ததாலும், புதிய முதலீடுகள் வரத் துவங்கி உள்ளதாலும் இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கின. இருப்பினும் பங்குச்சந்தைகள் துவங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே பங்குச் சந்தைகள் கடுமையாக சரிய துவங்கின. ரிசர்வ் வங்கி கவர்னராக மீண்டும் தான் தொடர விரும்பவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதை அடுத்து, முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும் சற்றுநேரத்தில் பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டன.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 159.76 புள்ளிகள் சரிந்து 26,466.15 புள்ளிகளாகவும், நிப்டி 54.45 புள்ளிகள் சரிந்து 8115.75 புள்ளிகளாகவும் இருந்தன. காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்ந்து 26,700-ஆகவும், நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 8,188-ஆகவும் இருந்தன. ஏற்ற - இறக்கத்தால் பங்குச்சந்தைகளில் தள்ளாட்டம் நிலவுகிறது.
இதனிடையே, ரகுராம் ராஜனின் முடிவு எதிரொலி காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 60 காசுகளுக்கு மேல் சரிந்து ரூ.67.79 ஆக இருந்தது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 20,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 20,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 20,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 20,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!