பதிவு செய்த நாள்
22 ஜூன்2016
00:59
புதுடில்லி : சோனி பிக்சர்ஸ் உள்ளூர் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. சோனி நிறுவனத்தின் விளையாட்டுக்கான, ‘டிவி’ சேனலை அதிகம் பேர் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த மாதம் நடந்த, ஒன்பதாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரை, 34.70 கோடி பேர் பார்த்து உள்ளனர். மேலும், இந்த சேனல் மூலம் அதிக விளம்பரங்களும் கிடைக்கின்றன. இதையடுத்து, சோனி நிறுவனம், உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை, நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக, கிராமம், சிறு நகரங்களில் ‘டிவி’ மூலம், மல்யுத்தம், கபடி உள்ளிட்ட போட்டிகளை, அதிகம் பேர் பார்த்து வருகின்றனர். இதனால், எங்கள் நிறுவனம், பல புதிய விளையாட்டுகளை ஒளிபரப்பி வருகிறது. தற்போது, உள்ளூர் போட்டிகளையும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|