பதிவு செய்த நாள்
22 ஜூன்2016
01:01
புதுடில்லி : கடந்த ஏப்., – மே மாதங்களில், நான்கு நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, 1,899.38 கோடி ரூபாய் திரட்டியுள்ளன.
இதில், அதிகபட்சமாக, மகிந்திரா அண்டு மகிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், 1,000 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. இந்நிறுவனம், 250 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முத்துாட் பைனான்ஸ் நிறுவனம், 250 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து, அதைவிட ஒரு மடங்கு அதிகமாக, 500 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. அது போல, 125 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த, கொசமட்டம் பைனான்ஸ் நிறுவனம், 235 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. சக்தி பைனான்ஸ் நிறுவனமும், 100 ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், முதலீட்டாளர்களின் ஆதரவு காரணமாக, 165 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.நிறுவனங்கள், அவற்றின் கடன்கள், விரிவாக்க நடவடிக்கைகள், நடைமுறை செலவினங்கள் உள்ளிட்டவற்றை சமாளிக்க, பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|