பதிவு செய்த நாள்
22 ஜூன்2016
01:02
புதுடில்லி : உள்நாட்டு விமான சேவையில், அன்னிய நேரடி முதலீடு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, அன்னிய விமான நிறுவனங்கள் தவிர்த்து, முதலீட்டாளர்கள், நேரடியாக, 49 சதவீதமும், அதற்கு மேல் அரசு அனுமதியுடனும் முதலீடு செய்யலாம்.
அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதால், புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டங்களில், முதலீடுகள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், ஏற்கனவே உள்ள விமான நிலையங்களின் விரிவாக்கத் திட்டங்களிலும், அன்னிய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, விமான துறை சார்ந்த ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கும்.
புதிய விமான நிலையங்கள் அமைக்கவும், சுற்றுப்புறங்களில், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும், நிலம் தேவைப்படும். இதனால், விமான துறை சார்ந்த ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி காணும் என, ஆய்வு நிறுவனமான, சி.பி.ஆர்.இ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|