பதிவு செய்த நாள்
29 ஜூன்2016
07:30
பெங்களூரு : கூர்க்கில் விளையும் டாடா நிறுவனத்தின் காபியை, அமெரிக்காவில் உள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. கர்நாடகா மாநிலம், கூர்க்கில், டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா நுல்லோர் எஸ்டேட் உள்ளது.இங்கு, காபி பயிர் விளைவிக்கப்படுகிறது. ஸ்டார்பக்ஸ் நிறுவனம், அமெரிக்காவில், சியாட்டிலில் டாடா தோட்டத்தில் விளையும் காபியை, விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்காக, ஸ்டார்பக்ஸ் காபி நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹோவார்டு சுல்ட்ஸ் மற்றும் டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி ஆகியோர், சியாட்டிலில் சந்தித்து பேசி உள்ளனர். இதுகுறித்து, ஸ்டார்பக்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனம், இதுவரை, பல இடங்களில் இருந்து வரும் காபியை விற்பனை செய்தது. முதன்முறையாக, இந்தியாவில், ஒரே இடத்தில் அதாவது, டாடா தோட்டத்தில் விளையும் காபியை விற்க உள்ளது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|