பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
18:15
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால் பிரிட்டன், உள்ளிட்ட ஐரோப்பிய பங்குச்சந்தைகள் மட்டுமின்றி ஆசிய, அமெரிக்க உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன. ஆனால் அந்த சரிவு நிலை கொஞ்சம் கொஞ்மாக மீண்டுள்ளது.
7-வது ஊதிய குழு உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வுடன் இருப்பது, ஜூன் மாதத்திற்கான பங்குஈவுத்தொகை, வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.33 புள்ளிகள் உயர்ந்து 26,999.72-ஆகவும், நிப்டி 83.75 புள்ளிகள் உயர்ந்து 8,287.75-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 28 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|