பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
23:42
புதுடில்லி : இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக, 68 கோடி டாலர் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கலாம் என்று, அசோசெம் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில், அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் என பல நிறுவனங்கள், இணையதள வணிகத்தில் உள்ளன. இந்திய இணையதள வணிக சந்தை, ஆண்டுதோறும், 35 – 40 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த சந்தை மதிப்பு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 ஆயிரம் கோடி டாலரை தாண்டும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இணையதள நிறுவனங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும், தங்களின் வணிகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளன. இதற்கான முயற்சிகளில் பல்வேறு நிறுவனங்கள் இறங்கியிருக்கின்றன. இதையடுத்து கட்டமைப்பு, சேமிப்பு கிடங்குகள், போக்குவரத்து கையாளுதல் ஆகிய பணிகளுக்காக, 68 கோடி டாலரை முதலீடு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|