சிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கைசிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கை ... பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி.எப்., பி.பி.எப்., விதிமுறைகளில் மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
07:09

தொழி­லாளர் வருங்­கால வைப்பு நிதி­யான பி.எப்., மற்றும் பொது சேம­நல நிதி­யான பி.பி.எப்., திட்­டங்­களின் விதி­மு­றையில் முக்­கிய மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன. பி.பி.எப்., நீண்ட கால பாது­காப்­பிற்­கான திட்­ட­மாக அமை­கி­றது. இந்த திட்­டத்தின் கால அளவு குறைந்த பட்சம் 15 ஆண்­டு­க­ளாகும். வரு­மான வரிச்­ச­லுகை உள்­ளிட்ட அம்­சங்­களை இது கொண்­டி­ருக்­கி­றது. இதற்கு முன், பி.பி.எப்., கணக்கை 15 ஆண்­டு­க­ளுக்கு முன்­பாக முடித்­துக்­கொள்ள முடி­யாது. பணம் செலுத்­தாமல் கணக்கு முடங்­கிய நிலையில் இருந்தால் கூட, 15 ஆண்­டுகள் கழித்தே பணத்தை எடுக்க முடியும். அதற்கு முன் தேவை என்றால் ஏழாம் நிதி­யாண்டு முதல் பகு­தி­ய­ளவு தொகையை மட்­டுமே எடுத்­துக்­கொள்ள அனு­மதி உண்டு.ஆனால், அண்­மையில் இது தொடர்­பாக மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிதி அமைச்­சகம் இதற்­கான அறி­விக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கி­றது. அதன் படி, பி.பி.எப்., கணக்கு துவக்­கப்­பட்டு ஐந்து நிதி­யாண்­டுகள் முடிந்­தி­ருந்தால், பாதியில் கணக்கை முடித்­துக்­கொண்டு, முழு பணத்­தையும் எடுத்­துக்­கொள்ள அனு­ம­திக்­கப்­படும். ஆனால், மருத்­துவ அவ­ச­ரத்­தேவை மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டு கார­ணங்­களுக்காக மட்­டுமே இதை செய்ய முடியும். பி.பி.எப்., கணக்கு வைத்­தி­ருப்­பவர் அல்­லது அவ­ரது குடும்ப உறுப்­பி­னரின் தீவிர அல்­லது உயி­ருக்கு ஆபத்­தான நோய்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்­படும் போது இவ்­வாறு செய்­யலாம். அதே­போல பிள்­ளை­களின் உயர் கல்வி தேவைக்­காக இதை பயன்­ப­டுத்­திக்­கொள்ளலாம். எனினும், இந்த இரண்டு கார­ணங்­க­ளுக்­கான உரிய ஆவ­ணங்கள் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும். இவ்­வாறு முன்­கூட்­டியே பணத்தை விலக்கி கொள்­ளும்­போது ஒரு சத­வீத வட்டி பிடித்தம் செய்­யப்­படும்.பி.எப்., பென்ஷன்இதே­போல பி.எப்., திட்­டத்தின் கீழ் உறுப்­பி­னர்கள் பென்ஷன் தொகையை உயர்த்­திக்­கொள்ளும் வகையில் புதிய விதி­முறை கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதன் படி, உறுப்­பி­னர்கள் பென்ஷன் தொகையை 4 சத­வீதம் அல்­லது 8.16 சத­வீதம் உயர்த்­திக்­கொள்ள வாய்ப்­ப­ளிக்­கப்­படும். பென்ஷன் தொகையை உயர்த்­திக்­கொள்ள, உறுப்­பி­னர்கள் பென்ஷன் பெறும் காலத்தை ஒரு ஆண்டு அல்­லது இரு ஆண்­டுகள் தள்­ளிப்­போட வேண்டும். பி.எப்., திட்­டத்தில் ஒரு தொகை பென்ஷன் கணக்கில் சேர்க்­கப்­படும். 58 வயது முதல் பென்ஷன் கிடைக்கும். இதை இரண்டு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு பெற்­றுக்­கொள்ள சம்­ம­தித்தால் 60 வயது முதல் 8.16 சத­வீதம் கூடு­த­லாக பென்ஷன் வழங்­கப்­படும். ஒரு ஆண்­டுக்குப் பிறகு பெற்­றுக்­கொள்ள சம்­ம­தித்தால் 4 சத­வீதம் கூடு­த­லாக பென்ஷன் கிடைக்கும். இந்த காலத்தில் உறுப்­பி­னர்கள் எந்த பங்­க­ளிப்பும் செலுத்த வேண்டாம்.ஏற்­க­னவே பி.எப்., பென்ஷன் பெறா­த­வர்கள் மற்றும் 58 வயதில் குறைந்த பட்சம் 10 ஆண்­டுகள் பணியில் இருந்­த­வர்­க­ளுக்கு இது பொருந்தும். இதற்­கான கோரிக்­கையை பி.எப்., அலு­வ­ல­கத்தில் சமர்ப்­பிக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)