பதிவு செய்த நாள்
05 ஜூலை2016
04:53
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, நடப்பு நிதியாண்டில் கூடுதலாக, 400 கிளைகள் துவக்க முடிவு செய்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு தற்போது, நாடு முழுவதும், 4,450 கிளைகள்; 13 ஆயிரத்து, 776 ஏ.டி.எம்.,கள் உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 33 நகரங்களில் உள்ள, 110 இடங்களில், ‘டச் பேங்கிங்’ என்ற, அனைத்து வங்கி பணிகளும் டிஜிட்டல் முறையில் இயங்கும் மையங்களை துவக்கி உள்ளது. இந்த நிலையில், இவ்வங்கி, கூடுதல் கிளைகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களை துவக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் கூறுகையில், ‘‘வாடிக்கையாளருக்கு விரைவாக வங்கி சேவையை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, நடப்பு நிதியாண்டில், கூடுதலாக, 400 கிளைகளும், 1,000 ஏ.டி.எம்., மையங்களும் அமைக்க உள்ளோம்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|