பதிவு செய்த நாள்
09 ஜூலை2016
07:15
பெங்களூரு : அமேசான் நிறுவனம், இந்தியாவில் ஆறு சேமிப்பு கிடங்குகளை அமைக்க உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம், இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில், 20 ஆயிரத்து, 300 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக, கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி, சென்னை, டில்லி, ஜெய்ப்பூர், மும்பை, கோவை ஆகிய இடங்களில், புதிய சேமிப்புக் கிடங்குகளை அமைக்க அமேசான் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு, 10 மாநிலங்களில் உள்ள கிடங்குகளின் மொத்த கொள்ளளவு, 25 லட்சம் சதுர அடியாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் ஆகியவற்றின் போட்டியைச் சமாளிக்கும் வகையில், இந்த புதிய கிடங்குகளை அமேசான் அமைக்கிறது. புதிய கிடங்குகள் அமைப்பதன் மூலம், 13 லட்சம் பொருட்களை, விரைவாக கையாளுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|