பதிவு செய்த நாள்
10 ஜூலை2016
02:37
புதுடில்லி:‘‘நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில் ஜவுளி சந்தை, 78 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது,’’ என்று, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் தலைவர் நைஷாதா பாரிக் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியாவில் ஜவுளி தொழிலின் சந்தை மதிப்பு, 4,000 கோடி டாலராக இருக்கும் என தெரிகிறது. மத்திய அரசு, ஜவுளி தொழிலை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், நடப்பு நிதியாண்டில், ஜவுளி சந்தை, 78 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஜவுளி தொழில் மூலம் ஐந்து கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய ஜவுளித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்மிருதி இரானி, துறையை சிறப்பாக மேம்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|