51 நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு நடவடிக்கை51 நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு நடவடிக்கை ... அன்­னிய முத­லீட்டை திரட்டஅமெ­ரிக்­காவில் அமைச்சர் கட்­கரி அன்­னிய முத­லீட்டை திரட்டஅமெ­ரிக்­காவில் அமைச்சர் கட்­கரி ...
இந்­தியா – பிரிட்டன் தாராள வர்த்­தக ஒப்­பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
02:45

புது­டில்லி:‘‘பிரிட்­ட­னுடன் தாராள வர்த்­தக ஒப்­பந்தம் செய்து கொள்­வ­தற்­கான வாய்ப்­புகள் குறித்து, இந்­தியா ஆராய்ந்து வரு­கி­றது,’’ என, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில்­ துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் பேசி­ய­தா­வது:ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் இருந்து பிரிட்டன் வெளி­யேற முடிவு செய்­ததைத் தொடர்ந்து அந்­நாடு, இந்­தியா உட­னான வர்த்­த­கத்தை வலுப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளது. இது தொடர்­பாக, டில்லி வந்த பிரிட்டன் வர்த்­தக துறை அமைச்சர் சஜித் ஜாவித் உடன், முதற்­கட்ட பேச்சு துவங்­கி­யுள்­ளது. இதை­ய­டுத்து, இரு தரப்­பிற்கும் இடையே விரி­வான பேச்சு நடை­பெறும்.
பிரிட்­டனில், இந்­தியா மிகப் பெரிய அளவில் முத­லீடு செய்­துள்­ளது. அங்கு, இந்­திய முத­லீட்­டா­ளர்கள் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யுள்­ளனர். பிரிட்டன் உட­னான வர்த்­தக உறவு, இந்­தி­யா­வுக்கு முக்­கி­ய­மா­னது. இந்­தியா, ஐரோப்­பிய கூட்­ட­மைப்­புடன், தாராள வர்த்­தக ஒப்­பந்தம் மேற்­கொள்ள உள்­ளது. இதற்­கான பணிகள், இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்ள சூழலில், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் இருந்து, பிரிட்டன் வெளி­யேற முடிவு செய்­துள்­ளது.
அதனால், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு உட­னான, தாராள வர்த்­தக ஒப்­பந்த விதி­மு­றை­களை முழு­மை­யாக மாற்ற வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அதே­ச­மயம், பிரிட்­ட­னுடன், இந்­தியா, தாராள வர்த்­தக ஒப்­பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு உள்­ளது. இது தொடர்­பாக, இரு நாடு­களின் பிர­தி­நி­திகள் இடையே விரைவில் பேச்சு துவங்கும். இவ்­வாறு அவர் கூறினார். பரஸ்­பர வர்த்­தகம்:இந்­தியா – பிரிட்டன் பரஸ்­பர வர்த்­தகம், 2014 – 15ல், 1,433 கோடி டாலர்; 2015 – 16ல், 1,400 கோடி டாலர் என்ற அளவில் இருந்­தது. கடந்த, 2006 – 2016 வரை­யி­லான நிதி­யாண்­டு­களில், பிரிட்டன், இந்­தி­யாவில், 2,310 கோடி டாலர் முத­லீடு செய்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)