தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு ... ஜூன் மாத மொத்த பணவீக்கம் 1.62 % உயர்வு ஜூன் மாத மொத்த பணவீக்கம் 1.62 % உயர்வு ...
மண்ணெண்ணெய் விலை உயர்கிறது : மானியத்தை குறைக்க அரசு அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2016
12:46

புதுடில்லி: மண்ணெண்ணெய் மீதான மானிய சுமையை குறைக்கும் வகையில், அடுத்த 10 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 25 பைசா விலை உயர்த்த, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, அரசு மூத்த அதிகாரி கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாமல், மானிய விலையிலேயே விற்கப்பட்டு வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை தவிர்க்க, மண்ணெண்ணெய் மீதான மானியச் சுமையை குறைக்க, பெட்ரோலியத் துறை முடிவு செய்தது.எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு, பெட்ரோலியத் துறை, அனுப்பியுள்ள கடிதத்தில், மண்ணெண்ணெய் விலையை, 2017 ஏப்ரல் வரை, 10 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 25 பைசா உயர்த்த அனுமதி அளித்துள்ளது; இம்மாதம், 1ம் தேதி முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும், பொது வினியோக முறையில் விற்கப்படும் மண்ணெண்ணெய், முந்தைய விலையிலேயே விற்கப்படுகிறது. மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு பின், பொது வினியோக முறை மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அதிகாரி கூறினார்.
5 ஆண்டுகளுக்கு பின்...: டில்லியில், விலை ஏற்றத்துக்கு முன், மண்ணெண்ணெய், லிட்டருக்கு, 14.96 ரூபாய்க்கு விற்கப்பட்டது; கடைசியாக, 2011, ஜூனில், லிட்டருக்கு, 2.64 ரூபாய் உயர்த்தப்பட்டது; அதற்கு முன், 2010, ஜூனில், லிட்டருக்கு, 3.23 ரூபாய் விலை ஏற்றப்பட்டது.மண்ணெண்ணெய், அடக்க விலையை விட, லிட்டருக்கு 13.12 ரூபாய் குறைவாகவிற்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், 12 ரூபாய் இழப்பை, மத்திய அரசு ஏற்கிறது. மீத இழப்பை, ஓ.என்.ஜி.சி., போன்ற எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கின்றன.பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு அளிக்கும் மொத்த மானியத்தில், 41.7 சதவீதம், மண்ணெண்ணெய்க்கே செலவாகிறது. கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமாக, 27 ஆயிரத்து, 571 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)