பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
12:21
புதுடில்லி: தங்க நகைத் தயாரிப்பாளர்களுக்கான, ஒரு சதவீத கலால் வரி விதிப்பில் புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்தது. தங்க நகைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, ஒரு சதவீத கலால் வரி விதிக்கும் திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்க நகை தயாரிப்பாளர்கள், நகைக் கடைகள், ஆறு வாரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, இது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு நேற்று அறிவித்ததாவது: ஆண்டு மொத்த விற்பனை வருவாய், 12 கோடி ரூபாய்க்கு அதிகமாக ஈட்டும் நிறுவனங்கள், வரி செலுத்த வேண்டும் என்பது, 15 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.மேலும், ஆண்டு மொத்த விற்பனை, 100 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள நிறுவனங்களில், இரண்டு ஆண்டுகளுக்கு, எவ்வித தணிக்கையும் செய்யப்படாது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|