பதிவு செய்த நாள்
19 ஜூலை2016
03:36
புதுடில்லி : கடந்த ஜூன் மாதம், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, நலிந்த பொதுத் துறை நிறுவனங்கள் குறித்த பட்டியலை, பிரதமர் அலுவலகத்திடம் அளித்திருந்தது. அதில், மூட வேண்டிய நிறுவனங்கள் குறித்தும், தனியார்மயமாக்க வாய்ப்புள்ள நிறுவனங்கள் பற்றியும், இரு வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்கள் குறித்து, மத்திய அரசு, புதிய கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, நிறுவனத்தை தேர்வு செய்து, பிரச்னைக்கு தீர்வு கண்ட பின், அடுத்த நிறுவனத்தை கையிலெடுக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த வகையில், நலிவுற்ற ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யும் பொறுப்பை, பிரதமர் அலுவலகம், நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்திடம் வழங்கியுள்ளது. அவரிடம், ‘நலிவுற்ற ஒரு பொதுத் துறை நிறுவனத்தை விற்பதா அல்லது பங்குகளை விற்பனை செய்வதா’ என, தெரிவிக்குமாறு, பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|