பதிவு செய்த நாள்
20 ஜூலை2016
04:31
புதுடில்லி : வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும், பண முதலீடு செய்வதற்கும், வருமானவரித் துறையின் அனுமதி கட்டாயமாக்கப்படுகிறது.
இதுகுறித்து, நிதியமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கறுப்புப் பண விவகாரங்களை விசாரிக்கும், சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து, நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. ‘பிளாக் மணி அண்ட் இன்போசிஷன் ஆப் டேக்ஸ் ஆக்ட், 2015’ல் திருத்தம் கொண்டு வரப்பட்டபின், அறிவிக்கப்படாத வெளிநாட்டு சொத்துகள் மற்றும் முதலீடுகள், மத்திய அரசின் அதிகாரத்திற்கு கீழ் வரும். அவற்றின் உரிமையாளர்கள், ரிசர்வ் வங்கி யின் அனுமதியுடன், சட்டப்பூர்வமாக வாங்கியதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இனிமேல், வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கு முன்பும், பண முதலீடு செய்வதற்கு முன்பும், வருமானவரித் துறையின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|