பதிவு செய்த நாள்
20 ஜூலை2016
04:33
புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்குவதற்கு வசதியாக, பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
அரசு துறைகள் இடையிலான, ஆவண பரிமாற்றங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. உடனடியாக தொழில் உரிமம் வழங்கி, தொழிற்சாலைகளுக்கு மிக விரைவாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது போல எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை, நேரில் பார்த்து மதிப்பீடு செய்ய, உலக வங்கி குழு, டில்லி வந்துள்ளது. இக்குழுவிற்கு, மத்திய அரசு துறை உயரதிகாரிகள், நாட்டில் சுலபமாக தொழில் துவங்க எடுத்துள்ளநடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்குவர்.
உலக வங்கி குழு, இரு வாரங்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, முக்கிய நகரங்களில், தொழில் துவங்குவதில் உள்ள, சாதக, பாதக அம்சங்களை ஆராயும். இதையடுத்து, சுலபமாக தொழில் துவங்கும் வசதியுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டு, 189 நாடுகளில், இந்தியா, 130வது இடத்திற்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|