பதிவு செய்த நாள்
20 ஜூலை2016
04:34
சென்னை : அதானி போர்ட், கடலுாரில் நிலக்கரி முனையம் அமைக்க உள்ளது. கடலுார் மாவட்டத்தில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், 3,600 மெகாவாட் திறன் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, 1,200 மெகாவாட் திறன் உடைய, மின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. இதற்கு தேவையான நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து, காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், மின் நிலையம் அருகில், நிலக்கரி முனையம் அமைக்க, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., முடிவு செய்துள்ளது. இதற்காக, அதானி போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதையடுத்து, அதானி போர்ட், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., மின் நிலையம் அருகில், நிலக்கரி முனையம் அமைக்க உள்ளது. இங்கு, ஆண்டுக்கு, 1.50 கோடி – இரண்டு கோடி டன் திறன் உடைய, நிலக்கரி கையாளப்பட உள்ளது. நிலக்கரி முனைய கட்டுமான பணிகளை, அடுத்த ஆண்டிற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளது, அதானி நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|