பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
07:07
புதுடில்லி : கத்தார் நாட்டைச் சேர்ந்த அயனா ஓட்டல் நிறுவனம், இந்தியாவிலும் ஓட்டல் தொழிலில் இறங்குகிறது.
கத்தார் நாட்டைச் சேர்ந்த அயனா ஓட்டல் அண்டு ரிசார்ட்ஸ் நிறுவனம், விருந்தோம்பல் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில் ஓட்டல் துறையில் நுழைவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி, கேரள மாநிலம் மூணாறில், 23 ஏக்கரில், 33 வில்லா ரிசார்ட்களை மேலாண்மை செய்வதற்கு, அயனா ஓட்டல் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த பணி, இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கர்நாடகாவில், 100 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும், 75 – 100 வில்லாக்களையும், அயனா நிறுவனம் மேலாண்மை செய்ய உள்ளது. வரும், 2017ல், ஹஜ் பயணிகளுக்காக, மெக்காவில், 611 அறைகள் கொண்ட ஓட்டல்; தோஹாவில், 180 அறைகள்; ஆக்ராவில், 150 அறைகள் கொண்ட ஓட்டல்களையும், அயனா நிறுவனம் மேலாண்மை செய்வதற்கு திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|