பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
07:12
புதுடில்லி : ‘தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், ஆபரணங்கள் துறையின் வளர்ச்சி, மதிப்பீட்டை விட, குறைவாகவே இருக்கும்’ என, ‘இக்ரா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: நடப்பாண்டு, ஆபரணங்கள் துறை, மதிப்பின் அடிப்படையில், 5 – 6 சதவீதம் வளர்ச்சி காணும் என, முன் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வளர்ச்சி, 3 சதவீதமாக குறையும் என, தற்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்புசர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டிலும் அதன் விலை அதிகரித்து வருகிறது. இதனால், தங்க ஆபரணங்கள் விலையை, நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இது, தங்க நகைகளின் விற்பனையை பாதித்துள்ளது. இந்தாண்டு, குறைந்த அளவிற்கே, தங்க ஆபரணங்கள் விற்பனையாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், கிராமப்புற பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. அத்துடன், இந்தாண்டு பருவ மழை நன்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், கிராமப்புற மக்களிடம் அதிக செலவழிப்பு வருவாய் புழங்க, வகை செய்யும்.
இதனால், கிராமப்புறங்களில் தங்க நகை விற்பனை சூடுபிடிக்கும் என, தெரிகிறது. தங்கம் விலை உயர்வால், அமைப்பு சார்ந்த நகை தயாரிப்பு நிறுவனங்கள், இதுவரை, தள்ளி வைத்திருந்த விரிவாக்கத் திட்டங்களை கையிலெடுக்க வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை அதிகரிப்பால், பழைய தங்க நகைகளை உருக்கி, புதிய நகைகள் செய்வதும் அதிகரிக்கும். இதுபோன்ற காரணங் களால், தங்க ஆபரணங்கள் விற்பனை, அளவின் அடிப்படையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் நன்கு இருக்கும் என, தெரிகிறது.பொருட்கள் வாங்குவதில், நுகர்வோரிடம் மாற்றம் காணப்படுகிறது; அவர்கள், கூடுதல் விலை யில், தரம், நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு உறுதி அளிக்கும், ‘பிராண்டு’ பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிராண்டு நகைகள்அதனால், பிராண்டு நகைகளின் விற்பனை அதிகரிக்கும். தங்க நகை விற்பனையில், அமைப்பு சார்ந்த, பிராண்டு நிறுவனங்களின் பங்கு, 25 சதவீதமாக உள்ளது. அதனால், நகை விற்பனை அளவு அதிகரிக்க, பிராண்டு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.அடுத்த ஆண்டு, தங்கம் விலை உச்சத்திற்கு சென்று, ஓரளவு நிலை பெறும் என, தெரிகிறது. அப்போது, ஆபரணங்கள் விற்பனை சூடு பிடிக்கும். தங்கம் விலை மேலும் உயரக் கூடும் என்ற எதிர்பார்ப்பும், ஒருவகையில், தங்க ஆபரணங்கள் விற்பனையை உயர்த்த துணை புரியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
* கடந்த ஓராண்டில், தங்கம், சவரனுக்கு, 3,408 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.சென்னையில், 2015, ஜூலை 21ல், ஒரு கிராம் ஆபரண தங்கம், 2,494 ரூபாய்க்கு விற்பனையானது. இது, இந்தாண்டு ஜூலை, 21ல், 2,920 ரூபாயாக உயர்ந்துள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|