பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
07:12
புதுடில்லி : ‘நடப்பாண்டு, இந்திய ஓட்டல் துறை மூலம், அரசுக்கு, 22,400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்’ என, தேசிய ஓட்டல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் விபரம்: இந்திய உணவு சேவைகள் துறையின் சந்தை மதிப்பு, 3.09 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2021ல், 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும். அப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஓட்டல் துறையின் பங்களிப்பு, 2.1 சதவீதத்தை எட்டும். இந்தாண்டு, இந்திய ஓட்டல்கள் மூலம், அரசுக்கு, 22,400 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும். மேலும், ஓட்டல் துறை, 58 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும்.
தடை கற்கள்உணவகத் துறையில், அமைப்பு சார்ந்த ஓட்டல்களின் பங்கு, 33 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள், உரிமம் பெறுவதில் உள்ள இடர்ப்பாடுகள், அதிக வரி விதிப்பு உள்ளிட்டவை ஓட்டல் துறையின் வளர்ச்சிக்கு, தடை கற்களாக உள்ளன. இது தவிர, ரியல் எஸ்டேட், தொழிலாளர் ஊதியம், அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடு, நிதிப் பிரச்னை உள்ளிட்டவையும், ஓட்டல் துறையை பாதிக்கின்றன.
மக்கள் நாட்டம்இப்பிரச்னைகளுக்கு அரசு தீர்வு கண்டால், ஓட்டல் துறை மேலும் மிகச் சிறப்பான வளர்ச்சி கண்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு நடுவிலும், கடந்த இரண்டு ஆண்டு களாக, ஓட்டல் துறை சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. மக்கள், அதிக அளவில் வித விதமான உணவுகளை நாடி ஓட்டல்களுக்கு வருவது தான் இதற்கு காரணம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|