பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
07:11
புதுடில்லி : இந்திய பாதுகாப்பு துறை, டாபர் இந்தியா நிறுவனத்துடன் சேர்ந்து, காஷ்மீரில் உள்ள லடாக் உள்ளிட்ட பனி படர்ந்த இடங்களில், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்து உள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில், பனி சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால், அங்கு மூலிகை பயிர்களை விளைவிக்க தெரியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில், டாபர் இந்தியாநிறுவனம், மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் வரும் டி.ஆர்.டி.ஓ., என்ற பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. அதன்படி, காஷ்மீரில் உள்ள லடாக் என்ற இடத்தில், டாபர் இந்தியா மற்றும் டி.ஆர்.டி.ஓ., இணைந்து, அரிய வகை மூலிகை மருந்துகளை பயிரிட முடிவு செய்து உள்ளது. அந்த மூலிகை பண்ணைகளுக்கு, உள்ளூரில் வசிக்கும் விவசாயிகளை அழைத்து வந்து, அது குறித்து விளக்கங்கள் தரப்படும். மேலும், மூலிகை பயிரிடுவது குறித்தும் பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|