பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
07:27
ஓ ய்வு கால திட்டமிடலைப்பொறுத்தவரை இந்தியாவில் உள்ள பணியாளர்களுக்கு மேலும் விழிப்புணர்வு தேவை என்பதை ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.
‘ஓய்வு காலத்தின் எதிர்காலம்’ எனும் தலைப்பில் இந்தியா உள்ளிட்ட 17 உலக நாடுகளில் எச்.எஸ்.பி.சி., ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பணிபுரியும் வயதினர் (25 வயதுக்கு மேல்) மத்தியில் உள்ள 47 சதவீதம் பேர் இன்னமும் ஓய்வு காலத்திற்கு சேமிக்க துவங்காத நிலையில் அல்லது ஏதேனும் காரணத்தினால் அந்த சேமிப்பை கைவிட்ட நிலையில் உள்ளனர் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.இந்த பிரிவில் உள்ள 21 சதவீதம் பேர் இன்னமும் ஓய்வு கால சேமிப்பை துவங்கவில்லை என தெரிவித்துள்ளனர். 44 சதவீதம் பேர், ஓய்வு கால சேமிப்பை துவங்கி பல்வேறு காரணங்களினால் அதை பாதியில் கைவிட்டுள்ளனர். மேலும், ஓய்வு கால திட்டமிடல் தொடர்பாக தொழில் முறை ஆலோசகர்களின் உதவியை நாடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வு உணர்த்தி உள்ளது. பலரும் தங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமே ஆலோசனை கேட்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|