பதிவு செய்த நாள்
30 ஜூலை2016
00:13
பெங்களூரு:மைசூர் சாண்டல் சோப், புதிய வகை பொருட்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. கே.எஸ்.டி.எல்., என்ற கர்நாடகா சோப்ஸ் அண்டு டிட்டர்ஜென்ட் நிறுவனம், கர்நாடக அரசுக்கு சொந்தமானது. இந்நிறுவனம், மைசூர் சாண்டல் என்ற பெயரில், குளியல் சோப்புகளை தயாரித்து வருகிறது. கேஸ்.எஸ்.டி.எல்., சோப் தயாரிக்கும் ஆலையை நவீனப்படுத்த, கர்நாடக அரசு, 27 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், கே.எஸ்.டி.எல்., ‘ஹேண்ட் வாஷ்’ உள்ளிட்ட புதிய பொருட்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, கர்நாடக தொழில் துறை அமைச்சர் தேஷ்பாண்டே கூறியதாவது:கே.ஸ்.டி.எல்., துவக்கத்தில், மைசூர் சாண்டல் சோப் மட்டும் விற்பனை செய்தது. தற்போது, ஊதுவத்தி, சலவை சோப்பு உள்ளிட்ட, 38 வகையான பொருட்களை விற்பனை செய்கிறது. தற்போது, ரோஜா, ஸ்டராபெர்ரி, அன்னாசி வாசனை உடைய, ‘ஹேண்ட் வாஷ்’, ‘மைசூர் சாண்டல் பாடி வாஷ்’ உள்ளிட்ட பொருட்கள் அறிமுகம் செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|