பதிவு செய்த நாள்
31 ஜூலை2016
04:25
மும்பை:ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்கும் தன்னுடைய, ‘பெஸ்ட் டீல்’ மையங்களின் எண்ணிக்கையை, 200ஆக அதிகரிக்க திட்டமிடுகிறது.பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான, சந்தைக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதால், பெஸ்ட் டீல் மையங்களின் எண்ணிக்கையை, 2018-ம் ஆண்டுக்குள் இருமடங்காக அதாவது, 200 மையங்களாக அதிகரிக்க, ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்சமயம், 19 மாநிலங்களில், 70 நகரங்களில் ஹோண்டாவின் பெஸ்ட் டீல் மையங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில், 100வது மையத்தை இந்நிறுவனம் துவக்கி வைத்தது. பெஸ்ட் டீல் மூலமாக எல்லா நிறுவனங்களின் வாகனங்களையும் வாங்கிக் கொண்டாலும், ஹோண்டா நிறுவனத்தின் வாகனங்களை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்று தரும் சேவையையும் செய்து தருகிறது. மற்ற பிராண்டு வாகனங்களை வாங்கி, ஸ்ரீராம் ஆட்டோமால் நிறுவனத்திடம் விற்றுவிடுகிறது.இந்த மையங்கள் மூலமாக, 45,000 புதிய வாடிக்கையாளர்களை, கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றிருப்பதாக ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|