பதிவு செய்த நாள்
01 ஆக2016
23:58
புதுடில்லி : மாருதி சுசூகி கார்களின் விலையில், 20 ஆயிரம் ரூபாய் வரை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸா கார் விலையில், 20 ஆயிரம் ரூபாயும், பலேனோ கார் விலையில், 10 ஆயிரம் ரூபாயும் அதிகரித்துள்ளது. மேலும் தேர்தெடுத்த சில மாடல்களின் விலை, 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில், உள்நாட்டில், 1,25,778 கார்களை விற்பனை செய்து உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 19.9 சதவீத வளர்ச்சியை பெற்றிருக்கிறது. உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை இதுவரை இவ்வளவு கார்களை விற்றதில்லை என, மாருதி தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அறிவித்தது, நாடு முழுவதும் நல்ல மழை உள்ளிட்ட காரணங்களால், வரும் அக்., மாதம் துவங்க உள்ள பண்டிகை காலத்தில், கார்களின் விற்பனை இன்னும் அதிகம் இருக்கும் என்ற நிலையில், இந்த விலை உயர்வை அறிவித்திருக்கிறது, மாருதி நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|