பதிவு செய்த நாள்
08 ஆக2016
07:13
அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் லத்தீன் அமெரிக்கா நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக மாநாடுகளை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அந்நிய முதலீட்டை ஈர்க்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இதுவரை அதிக கவனம் செலுத்தப்படாமல் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அந்நிய முதலீட்டை ஈர்க்க, இந்த பகுதியில் வர்த்தக மாநாடுகளை நடத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி செப்டம்பர் மாதம், நார்டிக் நாடுகளில் வர்த்தக மாநாடு நடைபெறுகிறது. ஏற்கனவே சுவீடன் முன்னணி முதலீட்டாளராக இருக்கிறது. பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதன் பிறகு லத்தீன் அமெரிக்கா நாடுகளை கவரும் வகையில், நவம்பரில், மெக்சிகோவில் வர்த்தக மாநாடு நடைபெற உள்ளது. டிசம்பர் மாதம் கிழக்கு ஐரோப்பாவில் மாநாடு நடைபெறுகிறது. மெக்சிகோ, பிரேசில், சிலி உள்ளிட்ட நாடுகளுடன் இரு தரப்பு வர்த்தக உறவுகளுக்கு நல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|