சி.இ.ஓ.,க்கள் ஆண்டு ஊதியம் ரூ.20 கோடியை நெருங்­கி­யதுசி.இ.ஓ.,க்கள் ஆண்டு ஊதியம் ரூ.20 கோடியை நெருங்­கி­யது ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.87 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.87 ...
சூடு பிடிக்கும் புதிய தொழில்.. கிடங்­கு­களில் முத­லீடு செய்­வது அதி­க­ரிப்பு; ஆண்­டுக்கு ரூ.15,000 கோடி குவிய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2016
05:14

மும்பை : வீடுகள், வணிக வளா­கங்கள் ஆகி­ய­வற்றில் மேற்­கொள்­ளப்­படும் முத­லீ­டுகள் மீதான வரு­வாயை விட, கிடங்­குகள் அதிக வருவாய் தரு­வதால், அத்­து­றையில், ஆண்­டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவு, முத­லீ­டுகள் குவிய வாய்ப்­புள்­ள­தாக, ரியல் எஸ்டேட் ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ‘பிராப் டைகர்’ தெரி­வித்­துள்­ளது.
இந்­தி­யாவில், மின்­னணு வணி­கத்தின் வளர்ச்­சியால், சரக்­கு­களை பாது­காப்­பாக வைக்கும் கிடங்­கு­க­ளுக்கு, தேவை அதி­க­ரித்­துள்­ளது. ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ உள்­ளிட்ட வலை­தள நிறு­வ­னங்கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விரை­வாக பொருட்­களை அனுப்­பு­வ­தற்­காக, நாடு முழு­வதும், ஆங்­காங்கே கிடங்­கு­களை அமைத்து வரு­கின்­றன.
அதிகரிக்கும் தேவை :அது­போல, ஒரே இடத்தில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்யும், பிக்­பஜார், ரிலையன்ஸ் பிரெஷ் போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கும், கிடங்­குகள் அத்­தி­யா­வ­சி­ய­மாக உள்­ளன. இதனால், முன்­னெப்­போதும் இல்­லாத அள­விற்கு, கிடங்­கு­க­ளுக்­கான தேவை, மிக வேக­மாக அதி­க­ரித்து வரு­கி­றது. அதற்­கேற்ப, கிடங்கு துறையின் வளர்ச்­சியை மேலும் ஊக்­கு­விக்கும் வகையில், மத்­திய அரசின் கொள்­கை­களும், சீர்­தி­ருத்த திட்­டங்­களும் உள்­ளன. ரியல் எஸ்டேட் சீர்­தி­ருத்த சட்டம், ரியல் எஸ்டேட் இன்­வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் ஆகி­ய­வையும், வரும் நிதி­யாண்டில் அம­லாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரியும், கிடங்கு துறையில் முத­லீ­டு­களை அதிக அளவில் ஈர்க்கும். அதனால், கிடங்­கு­க­ளுக்­கான தேவை மேலும் அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
கடந்த, 2015ல், டில்லி, மும்பை, புனே, சென்னை, கோல்­கட்டா, பெங்­க­ளூரு, ஐத­ராபாத், ஆம­தாபாத் ஆகிய நக­ரங்­களில், 9.70 கோடி சதுர அடி பரப்பில், முதல் மற்றும் இரண்டாம் நிலை கிடங்­குகள் அறி­மு­க­மா­யின; இது, இந்­தாண்டு, 11.60 கோடி சதுர அடி ஆக உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
அதிக லாபம் :வரும், 2020ல், கிடங்­கு­க­ளுக்­கான தேவை, 150 கோடி சதுர அடி ஆக இருக்கும் என, ரியல் எஸ்டேட் ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ஜோன்ஸ் லங் லாசலி மதிப்­பிட்­டுள்­ளது. ரியல் எஸ்டேட் துறையில், இதர பிரி­வு­களை விட, கிடங்­கு­களில் முத­லீடு செய்­வது அதிக லாப­க­ர­மாக உள்­ளதால், அதில், ஏரா­ள­மான தனியார் பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்கள் முத­லீடு செய்து வரு­கின்­றன. இத்­த­கைய முத­லீட்டு வாய்ப்பை, தற்­போது, வெளி­நா­டு­களைச் சேர்ந்த, பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்கள் தான் அதிகம் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.
‘‘உள்­நாட்டு பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்கள், குடி­யி­ருப்­புகள் மற்றும் வணிக வளா­கங்கள் ஆகி­வற்றில் அதிகம் கவனம் செலுத்தி வரு­கின்­றன,’’ என, பிராப் டைகர் நிறு­வ­னத்தின் தலைமை வர்த்­தக அதி­காரி அங்குர் தவான் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)