பதிவு செய்த நாள்
10 ஆக2016
06:35
புதுடில்லி : பிரிட்டானியா நிறுவனம், 450 கோடி ரூபாய் முதலீட்டில், மூன்று புதிய தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்து உள்ளது.
பிஸ்கட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரிட்டானியாநிறுவனத்திற்கு, மேற்குவங்கம், ஒடிசா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், 37 தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள், 10 லட்சம் டன் பிஸ்கட் தயாரிக்கும் திறன் உடையவை. தற்போது, பிஸ்கட் தேவை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க, தொழிற்சாலையின் உற்பத்தி திறனை ஆண்டுதோறும் கூடுதலாக, ஒரு லட்சம் டன் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, 450 கோடி ரூபாய் முதலீட்டில், அசாம் – கவுகாத்தி, ஆந்திரா, குஜராத் – முத்ரா ஆகிய இடங்களில், மூன்று புதிய தொழிற்சாலைகளை அமைக்க, பிரிட்டானியா முடிவு செய்து உள்ளது. இதற்கான பணிகளை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் துவக்க, அந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|