பதிவு செய்த நாள்
10 ஆக2016
06:34
கோல்கட்டா : ஜியோமி நிறுவனம், இந்தியாவில், ‘ஏர்பியூரிபையர்’ விற்பனையிலும் இறங்க முடிவு செய்து உள்ளது.
சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனம், ‘ஸ்மார்ட் போன்’ தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், குறைந்த விலை மொபைல் போன்களை அதிகளவில் அறிமுகம் செய்ய முடிவு செய்து உள்ளது. இந்நிலையில், தற்போது, இந்தியாவில், ‘ஏர்பியூரிபையர்’ விற்பனையிலும் களம் இறங்க திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், சீனாவில், 2015ம் ஆண்டு, நவ., மாதம், ஏர்பியூரிபையர் சாதனங்களை அறிமுகம் செய்தது. இதன் விலை, 7,000 ரூபாய் என்றளவில் உள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்தியாவில், எங்கள் நிறுவனத்திற்கு, அதிக டீலர்கள் உள்ளனர். இதையடுத்து, இந்தியாவிலும், விரைவில், ஏர்பியூரிபையர் விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|