பதிவு செய்த நாள்
11 ஆக2016
07:07
புவனேஸ்வர் : காலணி விற்பனையில் முன்னணியில் உள்ள உட்லேண்டு நிறுவனம், நடப்பு நிதியாண்டில், விற்றுமுதலை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
உட்லேண்டு நிறுவனம், இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்து, தன் பொருட்களை, அவற்றின் இணையதளங்களில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், இந்நிறுவனம், தன் விற்றுமுதலை, 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹர்கிரத் சிங் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல், கடந்த நிதியாண்டில், 1,100 கோடி ரூபாயாக இருந்தது. எங்கள் தயாரிப்புகளை, ஐக்கிய அரபு நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்ய முடிவு செய்து உள்ளோம். இதன் மூலம், நடப்பு நிதியாண்டில், விற்றுமுதலை, 10 சதவீதம் – 15 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|