பதிவு செய்த நாள்
12 ஆக2016
05:54
புதுடில்லி : ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் ஈடுபடுவதற்கு, ஆதித்ய பிர்லா நிறுவனத்திற்கு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த, ஆதித்யா பிர்லா பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த, எம்.எம்.ஐ., ஹோல்டிங்ஸ் இணைந்து, ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளன. இந்நிறுவனம், ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் ஈடுபடுவதற்கு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., என்ற இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு அமைப்பிடம், ஒப்புதல் கேட்டது. இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நடப்பாண்டின், கடை காலாண்டில், இந்நிறுவனம் செயல்பட துவங்கும்.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவில், ஹெல்த் இன்சூரன்ஸ் துறைக்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, வாடிக்கையாளர் விரும்பும் வகையில், எங்கள் நிறுவனம் தரமான சேவை வழங்கும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|