பதிவு செய்த நாள்
12 ஆக2016
05:52
புதுடில்லி : லிவ்பியூர் நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் லிவ்பியூர் நிறுவனம், முதன்முறையாக, ‘வை – பை’ வசதியுடன் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்நிறுவனத்திற்கு, 23 மாநிலங்களில், 15 ஆயிரம் விற்பனை முகவர்கள் உள்ளனர்.
விற்பனை இலக்கு குறித்து, இந்நிறுவனத்தின் நிறுவனர் ராகேஷ் மல்கோத்ரா கூறியதாவது: இந்தியாவில், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களின் தேவை ஆண்டுதோறும், 20 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 12 சதவீதம்; விற்பனை, 300 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதன் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|